புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் த்ரிஷ்யம். மலையாள சினிமாவில் டிரண்ட் செட்டர் படமாக அமைந்தது. 100 கோடி வசூல், வெள்ளிவிழா என த்ரிஷயம் படைத்த சாதனைகள் பல. குறிப்பாக இந்திய மொழிகள், சீன மொழிகளில் ரீமேக் ஆனது. தற்போது ஹாலிவுட்டிலும் தயாராகிறது.
ஒரு குடும்ப தலைவன் தனக்கிருக்கும் சமயோசித அறிவைக் கொண்டு தன் குடும்பத்தை ஒரு கொலை குற்றத்தில் இருந்து காப்பாற்றுவதுதான் த்ரிஷ்யத்தின் ஒன்லைன் ஸ்டோரி. மோகன்லாலும், மீனாவும் குடும்ப தலைவனும், தலைவியாகவே வாழ்ந்தார்கள். தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி அதவும் வெற்றி பெற்றிருக்கிறது. 2ம் பாகம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், மீனாதான் நடிக்கிறார்கள்.
இப்போது தமிழிலும் ரீமேக் ஆக பேச்சு நடக்கிறது. முதல் பாகத்தில் நடித்த கமலும், கவுதமியும் தற்போது பிரிந்து விட்டதால் படம் தொடங்குவதில் சின்ன பிரச்சினை இருக்கிறது. இந்த நிலையில் த்ரிஷ்யத்தின் 3ம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாராகி விட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: த்ரிஷ்யம் 3ம் பாகத்தை தயாரிக்க நான் தயாராக இருக்கிறேன். அதற்கான ஐடியாவும் இயக்குனர் ஜீத்து ஜோசப்புக்கு இருக்கிறது. மோகன்லாலும், ஜீத்து ஜோசப்பும் இதுகுறித்து பேசியிருக்கிறார்கள் என்கிறார் ஆண்டனி.