பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் த்ரிஷ்யம். மலையாள சினிமாவில் டிரண்ட் செட்டர் படமாக அமைந்தது. 100 கோடி வசூல், வெள்ளிவிழா என த்ரிஷயம் படைத்த சாதனைகள் பல. குறிப்பாக இந்திய மொழிகள், சீன மொழிகளில் ரீமேக் ஆனது. தற்போது ஹாலிவுட்டிலும் தயாராகிறது.
ஒரு குடும்ப தலைவன் தனக்கிருக்கும் சமயோசித அறிவைக் கொண்டு தன் குடும்பத்தை ஒரு கொலை குற்றத்தில் இருந்து காப்பாற்றுவதுதான் த்ரிஷ்யத்தின் ஒன்லைன் ஸ்டோரி. மோகன்லாலும், மீனாவும் குடும்ப தலைவனும், தலைவியாகவே வாழ்ந்தார்கள். தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி அதவும் வெற்றி பெற்றிருக்கிறது. 2ம் பாகம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், மீனாதான் நடிக்கிறார்கள்.
இப்போது தமிழிலும் ரீமேக் ஆக பேச்சு நடக்கிறது. முதல் பாகத்தில் நடித்த கமலும், கவுதமியும் தற்போது பிரிந்து விட்டதால் படம் தொடங்குவதில் சின்ன பிரச்சினை இருக்கிறது. இந்த நிலையில் த்ரிஷ்யத்தின் 3ம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாராகி விட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: த்ரிஷ்யம் 3ம் பாகத்தை தயாரிக்க நான் தயாராக இருக்கிறேன். அதற்கான ஐடியாவும் இயக்குனர் ஜீத்து ஜோசப்புக்கு இருக்கிறது. மோகன்லாலும், ஜீத்து ஜோசப்பும் இதுகுறித்து பேசியிருக்கிறார்கள் என்கிறார் ஆண்டனி.