பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தொகுப்பாளினியாக இருந்த ரம்யா சுப்பிரமணியம் இப்போது நடிகை. திருமணம் செய்து கொள்ளும்வரை நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்த ரம்யா, விவாகரத்துக்கு பிறகு தீவிரமாக நடிக்க ஆரம்பித்து விட்டார். மொழி படத்தில் தொடங்கிய அவரது பயணம் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை, மாஸ்டர் என வளர்ந்தது.
இப்போது முதன் முறையாக சங்கத்தலைவன் என்ற படத்தில் கதை நாயகியாக நடித்துள்ளார். இது தறியுடன் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவனாக சமுத்திரகனியும், அவரது மனைவியாக ரம்யாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கருணாஸ், மாரிமுத்து, சுனுலட்சுமி, பாலாசிங் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார், ஸ்ரீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிமாறன் இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரு நாளைக்கு 14 மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்யும் நெசவாளர்களின் வாழ்வியில் கதை. தங்களின் வாழ்க்கைக்காக அவர்கள் நடத்தும் போராட்டத்திலிருந்து அவர்களை விடுவிக்க முயற்சிக்கும் ஒரு புரட்சிக்காரனின் கதை. இதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் திரைக்கதை. நாவலில் சொல்லப்பட்ட இடங்களிலேயே படப்பிடிப்பும் நடத்தப்பட்டு உண்மைக்கு மிக நெருக்கமாக படம் உருவாகி உள்ளது. என்கிறார்.