துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும்போதே திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அமலாபால். அதே வேகத்தில் திருமண வாழ்க்கையில் இருந்தும் வெளியில் வந்தார். புதிய காதலர், தனிமை பயணம், மலையேற்றம் என ஜாலியாக இருந்து வந்த அமலாபாலின் வாழ்க்கையில் இப்போது பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் தன்னை முழுமையாக ஆன்மிக பாதைக்கும் திருப்பி விட்டுள்ளார். கோவை ஈஷா யோகா மையத்தின் சிஷ்யை ஆகியிருக்கிறார். அங்கு தற்போது குண்டலினி யோகா கற்று வருகிறார். அதோடு பிற உயிர்களிடத்து அன்பு செலுத்த வேண்டும் என்பதற்காக தனது வீட்டில் நிறைய பூனைகளை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: என்னை நான் குணப்படுத்துகிறேன், மாற்றுகிறேன் எனது வரம்புகள், அச்சங்கள் மற்றும் எனது கடந்தகால திட்டங்கள் அனைத்தும் இனி எனக்கு சேவை செய்யாது. நான் என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன். நான் தயார். என்று எழுதியிருக்கிறார். திருமண வாழ்க்கையில் சறுக்கல், காதல் தோல்வி ஆகியவை அவரை ஆன்மிகத்தின் பக்கம் திருப்பி இருப்பதாக கூறப்படுகிறது.