திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும்போதே திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அமலாபால். அதே வேகத்தில் திருமண வாழ்க்கையில் இருந்தும் வெளியில் வந்தார். புதிய காதலர், தனிமை பயணம், மலையேற்றம் என ஜாலியாக இருந்து வந்த அமலாபாலின் வாழ்க்கையில் இப்போது பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் தன்னை முழுமையாக ஆன்மிக பாதைக்கும் திருப்பி விட்டுள்ளார். கோவை ஈஷா யோகா மையத்தின் சிஷ்யை ஆகியிருக்கிறார். அங்கு தற்போது குண்டலினி யோகா கற்று வருகிறார். அதோடு பிற உயிர்களிடத்து அன்பு செலுத்த வேண்டும் என்பதற்காக தனது வீட்டில் நிறைய பூனைகளை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: என்னை நான் குணப்படுத்துகிறேன், மாற்றுகிறேன் எனது வரம்புகள், அச்சங்கள் மற்றும் எனது கடந்தகால திட்டங்கள் அனைத்தும் இனி எனக்கு சேவை செய்யாது. நான் என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன். நான் தயார். என்று எழுதியிருக்கிறார். திருமண வாழ்க்கையில் சறுக்கல், காதல் தோல்வி ஆகியவை அவரை ஆன்மிகத்தின் பக்கம் திருப்பி இருப்பதாக கூறப்படுகிறது.