கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
கொரோனா தமிழ் சினிமாவையே மொத்தமாக புரட்டி போட்டு விட்டது. ஒரு புறம் வெப் சீரிஸ்களின் ஆதிக்கம் தலைதூக்கி உள்ளது. மற்றொரு பக்கம் பெரிய பட்ஜெட் படங்கள் கூட ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், சின்னத்திரைக்கென்று தயாரிக்கப்படும் படங்களும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் விக்ரம்பிரபு, லட்சுமிமேனன் நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி படம் சின்னத்திரைக்கென்றே தயாரிக்கப்பட்டு பொங்கல் பண்டிகை அன்று ஒளிபரப்பானது. தற்போது அதேபோல ஒரு படம் சத்தமின்றி தயாராகி வருகிறது.
மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பிறகு ராஜேஷ் எம்.இயக்த்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் ஜோடியாக அம்ரிதா அய்யர் நடிக்கிறார். இவர்கள் தவிர ஆனந்தராஜ், டேனியல், ரேஷ்மா உள்பட பலர் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தமின்றி நடந்து வருகிறது. இதுவரை 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தயாரிக்கும் முன்னணி சேனல், ஏப்ரல் 14 அல்லது மே 1 அன்று நேரடியாக டிவியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.