ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து கொடி கட்டிப் பறந்தவர்களில் குஷ்பு குறிப்பிடத்தக்கவர். நம்பர்ஒன் நடிகையாக இருந்த குஷ்புவிற்கு கோயில் கட்டிய வழிபாடு நடத்திய வரலாற்று அதிசயங்கள் கூட தமிழ்நாட்டில் அரங்கேறியது. டைரக்டர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளாகி விட்ட குஷ்பு, சமீபகாலமாக முழுநேர அரசில்வாதியாகி விட்டார். ஆனபோதிலும் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது மகள்களான அவந்திகா, அனந்திதா ஆகியோரின் புகைப்படங்களை அவ்வப்போது தனது டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார் குஷ்பு. தற்போது தனது இளைய மகள் அனந்திதாவின் புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, எனது சிறிய தேவதை அனந்திதா சுந்தரின் சிரிப்பு தொடர்ந்து என்னை ஊக்கமளித்துக் கொண்டிருக்கிறது. உத்வேகம் மற்றும் வழிகாட்டும் சக்தியாக இருக்கிறாள். என் பொம்முக்குட்டி அம்மாவை நான் நேசிக்கிறேன். ஐ லவ் யூ என்றும் பதிவிட்டுள்ளார். அந்த டுவிட்டில் நிறைய அன்பு, இதயம், முத்தங்கள், உதடுகள் மற்றும் அரவணைப்பு ஈமோஜிகளை சேர்த்துள்ளார் குஷ்பு.
இந்த டுவீட் சோசியல் மீடியாவில் நிறைய பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதோடு அடுத்த கதாநாயகி ரெடியாகிவிட்டார் என சிலர் பதிவிட்டுள்ளனர்.