பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் நடிகனாக அறிமுகமானவர் தமன். தெலுங்கு இயக்குனரும், தயாரிப்பாளருமான கண்டசாலா பாலராமையாவின் பேரன் இவர். இசைக்குடும்பத்திலிருந்து வந்தவரான தமன் நடிக்கும் ஆர்வத்தை விட்டுவிட்டு இசையமைப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
தமிழ், தெலுங்கில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த 'அலா வைகுந்தபுரம்லோ' தெலுங்குப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து தற்போது மிகவும் பிஸியாகிவிட்டார்.
தமிழில் தமன் இசையமைத்த 'ஈஸ்வரன்' படம் கடந்த வாரம் வெளியானது. தெலுங்கில் இசையமைத்த 'கிராக்' படம் பத்து நாட்களுக்கு முன்னர் வெளிவந்தது. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் 'காப்பி' என்ற சர்ச்சை எழுந்தது. தமன் மீது பொதுவாகவே காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் அடிக்கடி எழும். அப்படியான விமர்சனங்களுக்கு கோபமாக பதிலடி கொடுத்துள்ளார் தமன்.
“சினிமா இசையில் பலரும் பங்கேற்பர். இயக்குனர்கள், பாடல் எழுதுபவர்கள் ஆகியோருடன் ஒன்றிணைந்து நாங்கள் வேலை பார்க்க வேண்டும். ஒரு டியூன் காப்பி என்றால் அது அவர்களுக்குத் தெரியாது. வேலையில்லாத மக்கள், இசை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்தான் என் மீது குற்றம் சாட்டுகிறார்கள். இதுவரையில் என் மீது காப்பி அடித்தேன் என எந்த ஒரு காப்பி திருட்டு வழக்குகளும் இல்லை. அப்படியிருக்க என் மீது ஏன் இப்படி குற்றம் சாட்ட வேண்டும்,” எனக் கேட்டுள்ளார்.
'ஈஸ்வரன்' படப் பாடல்கள் எதுவும் காப்பி அடித்து உருவாக்கப்படவில்லை என்று நம்புவோமாக.