கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் நடிகனாக அறிமுகமானவர் தமன். தெலுங்கு இயக்குனரும், தயாரிப்பாளருமான கண்டசாலா பாலராமையாவின் பேரன் இவர். இசைக்குடும்பத்திலிருந்து வந்தவரான தமன் நடிக்கும் ஆர்வத்தை விட்டுவிட்டு இசையமைப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
தமிழ், தெலுங்கில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த 'அலா வைகுந்தபுரம்லோ' தெலுங்குப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து தற்போது மிகவும் பிஸியாகிவிட்டார்.
தமிழில் தமன் இசையமைத்த 'ஈஸ்வரன்' படம் கடந்த வாரம் வெளியானது. தெலுங்கில் இசையமைத்த 'கிராக்' படம் பத்து நாட்களுக்கு முன்னர் வெளிவந்தது. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் 'காப்பி' என்ற சர்ச்சை எழுந்தது. தமன் மீது பொதுவாகவே காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் அடிக்கடி எழும். அப்படியான விமர்சனங்களுக்கு கோபமாக பதிலடி கொடுத்துள்ளார் தமன்.
“சினிமா இசையில் பலரும் பங்கேற்பர். இயக்குனர்கள், பாடல் எழுதுபவர்கள் ஆகியோருடன் ஒன்றிணைந்து நாங்கள் வேலை பார்க்க வேண்டும். ஒரு டியூன் காப்பி என்றால் அது அவர்களுக்குத் தெரியாது. வேலையில்லாத மக்கள், இசை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்தான் என் மீது குற்றம் சாட்டுகிறார்கள். இதுவரையில் என் மீது காப்பி அடித்தேன் என எந்த ஒரு காப்பி திருட்டு வழக்குகளும் இல்லை. அப்படியிருக்க என் மீது ஏன் இப்படி குற்றம் சாட்ட வேண்டும்,” எனக் கேட்டுள்ளார்.
'ஈஸ்வரன்' படப் பாடல்கள் எதுவும் காப்பி அடித்து உருவாக்கப்படவில்லை என்று நம்புவோமாக.