புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் நடிகர்களில் விஜய்க்குத்தான் கேரளாவில் ரசிகர்கள் அதிகம். விஜய் நடித்து வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் அங்குள்ள மலையாள ரசிகர்கள் தமிழ் ரசிகர்களைப் போலவே வரவேற்று கொண்டாடுவார்கள்.
ஆனால், பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள 'மாஸ்டர்' படம் கேரளாவில் வெளியாகாத சூழல் ஒன்று உருவானது. கேரளாவில் உள்ள தியேட்டர்களுக்கு அந்த மாநில அரசு 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியது. இருப்பினும் மாநில அரசிடமிருந்து பல சலுகைகளை வேண்டி கேரளா பிலிம் சேம்பர் தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என்றது.
அதன் காரணமாக 'மாஸ்டர்' படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது. அங்கு முன்னணி நடிகர் ஒருவரின் பார்ட்னர் தான் திரைப்பட சங்கம் ஒன்றின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். தமிழ்ப் படமான 'மாஸ்டர்' படம் கேரளாவில் பெரிய அளவில் வெளியாவதை அவர் விரும்பவில்லை என்று கேரள விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
'மாஸ்டர்' படத்தைத் திரையிட முடியாமல் தடை செய்யும் நோக்கில் வேறு ஏதாவது முயற்சிகள் நடந்தால் அதை எதிர்க்கவும் கேரள விஜய் ரசிகர்கள் தயாராக இருந்தார்களாம்.
இந்நிலையில் தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என்று சொன்னதை கேரளா பிலிம் சேம்பர் மறு பரிசீலனை செய்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது என்கிறார்கள். அப்படி நடந்தால் 'மாஸ்டர்' படம் கேரளாவில் வெளியாகலாம். விரைவில் இது பற்றிய முழுமையான தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.