ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் வெளிவந்த 'காந்தாரா சாப்டர் 1' படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படம் ஹிந்தி தவிர மற்ற தென்னிந்திய மொழிகளில் நாளை ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மலையாளத்தில் 300 கோடி வசூலித்த 'லோகா' படமே எட்டு வார இடைவெளிக்குப் பிறகுதான் ஓடிடியில் வருகிறது. ஆனால், 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' படத்தை நான்கு வாரங்களில் ஏன் வெளியிடுகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.
படத்தை ஆரம்பிப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே இப்படத்திற்கான ஓடிடி உரிமையை விற்றுள்ளார்கள். அப்போது போட்ட ஒப்பந்தத்தின்படி நான்கு வாரங்களில் ஓடிடியில் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம். அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மாற்ற முடியாததால் நான்கு வாரங்களில் வெளியிடுகிறார்களாம். இருந்தாலும் தியேட்டர் வசூல் பாதிக்கப்படாது என்றே நம்புகிறார்கள்.