மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் |

தற்போது தெலுங்கில் ‛விஸ்வாம்பரா, மன சங்கர வர பிரசாத் காரு' போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சிட்டி சிவில் கோர்ட்டில் அவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆன்லைனில் ஆடை விற்பனை செய்பவர்கள் தனது அனுமதியின்றி தன்னுடைய பெயர், குரல், புகழ் போன்ற அடையாளங்களை வர்த்தக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்கள். இது போன்ற விளம்பரங்கள் எனது பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் உள்ளது. அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிரஞ்சீவியின் பெயர், அடையாளம், புகைப்படம், குரல் போன்றவற்றை வர்த்தக ரீதியாக அவரது அனுமதி இன்றி பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.