கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கியவர் நெல்சன். அந்த படம் 600 கோடி வசூலித்தது. அதையடுத்து ரஜினி நடித்த வேட்டையன் பெரிதாக வசூலிக்காத நிலையில், தற்போது கூலி படம் 500 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினி. வேட்டையன் படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடித்த நிலையில், கூலி படத்தில் அமீர்கான் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த ஜெயிலர்-2 படத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் இணைந்திருக்கிறார்.
இந்நிலையில் ஜெயிலர் -2 படம் குறித்து ஒரு விழாவில் இயக்குனர் நெல்சன் கூறும்போது, ‛‛ஜெயிலர் படத்தைப் போலவே ஜெயிலர் 2 படமும் மிகச் சிறப்பாக வந்துள்ளது. என்றாலும் இந்த படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று இப்போதே என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும். முக்கியமாக இப்போதே ஜெயிலர் 2 படம் குறித்து ஓவராக ஹைப்பை ஏற்றி பேச விரும்பவில்லை. ஏற்கனவே ஜெயிலர் 2 படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நேரத்தில் நானும் இன்னும் ஹைப்பை ஏற்றும் வகையில் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். அப்படி நானும் பேசினால் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து விடும்'' என்று கூறினார் .