சினிமாவிலும் கை வைத்த டிரம்ப்: இந்தியப் படங்களுக்குப் பெரும் பின்னடைவு | தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் |
பார்க்கிங் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். சமீபத்தில் இந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்து சிம்புவின் 49வது படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென சிம்புவிற்கு வெற்றிமாறன் பட வாய்ப்பு வந்ததால் இவரின் படம் தள்ளிப்போகிறது. இதனால் வேறு ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் சமீபத்தில் நடிகர் விக்ரமை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார். இந்த கதை விக்ரமிற்கு பிடித்துள்ளதால் படமும் உறுதியாகியுள்ளதாம். இது விக்ரமின் 65வது படமாக உருவாகிறது. இதற்கான அறிவிப்பு இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியாகும் என்றும், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்கிறார்கள்.