விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
பிற்காலத்தில் அம்பிகா - ராதா, ஊர்வசி - கல்பனா சகோதரிகள் இணைந்து பல படங்களில் நடித்தார்கள். ஆனால் முதன் முதலாக 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் 'சிங்காரி'. 1951ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கி இருந்தார். நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்தது. இது சிக்கலான திரைக்கதையை கொண்ட காமெடி படம். மக்களின் வரவேற்பையும் பெற்றது.
'திருவிதாங்கூர் சகோதரிகள்' என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமாகி நடனம் ஆடி வந்தவர்கள் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள், இவர்களில் பத்மினி முதலில் நடிகை ஆனார், லலிதா அதன் பிறகு அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்தார். ராகினி ஏராளமான படங்களில் நடித்தபோதும் தமிழில் நாயகியாக நடிக்கவில்லை.
இவர்கள் மூன்று பேரும் இணைந்து பல படங்களில் ஆடி உள்ளனர். ஆனால் இணைந்து நடித்த படம் 'சிங்காரி'. இதில் டி.ஆர்.ராமச்சந்திரன் ஜோடியாக பத்மினியும், எஸ்.வி.சகஸ்ரநாமம் ஜோடியாக லலிதாகவும், டி.ஆர்.ராமச்சந்திரன் ஜோடியாக ராகினியும் நடித்தார்கள். இவர்கள் தவிர டி.பாலசுப்ரமணியம், வி.கே.ராமசாமி, சி.வி.நாயகம், சி.எஸ்.பாண்டியன், 'காகா' ராதாகிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு, என்.ஆர்.லீலா, எம்.ஆர்.லீலா, எம். பாக்யம் ஆகியோரும் நடித்தார்கள்.