மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் |

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‛உப்பு கப்புறம்பு' படம் கடந்த ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்தது. சமீபத்தில் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்பட அனுபவம் குறித்த பேட்டியளித்த கீர்த்தி சுரேஷ், ‛‛இந்தப் படத்தின் படப்பிடிப்பு வீட்டில் இருப்பது போல் நிதானமாக, பொறுமையாக நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும், இன்னும் கொஞ்ச நாட்கள் படப்பிடிப்பு இருந்திருக்கலாம் என வருந்தினேன்.
இந்தத் திரைப்படம் நகைச்சுவையைப் பயன்படுத்தி ஒரு தீவிரமான விஷயத்தை முன்னிலைப்படுத்துகிறது. எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம் என்றில்லை. சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன். அப்படி ஆகிவிட்டால் நன்றாக சாப்பிடுவேன். அதேபோல் காரை எடுத்துக்கொண்டு தனியாக ட்ரைவ் செய்வேன், அப்போது நல்ல மியூசிக் கேட்பேன். அதுமட்டுமின்றி, வீட்டில் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். என்ன அப்செட் வந்தாலும் அவன் முகத்தை பார்த்தால் போதும் அவை அனைத்தும் காணாமல் போய்விடும்'' என்றார்.