பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‛உப்பு கப்புறம்பு' படம் கடந்த ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்தது. சமீபத்தில் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்பட அனுபவம் குறித்த பேட்டியளித்த கீர்த்தி சுரேஷ், ‛‛இந்தப் படத்தின் படப்பிடிப்பு வீட்டில் இருப்பது போல் நிதானமாக, பொறுமையாக நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும், இன்னும் கொஞ்ச நாட்கள் படப்பிடிப்பு இருந்திருக்கலாம் என வருந்தினேன்.
இந்தத் திரைப்படம் நகைச்சுவையைப் பயன்படுத்தி ஒரு தீவிரமான விஷயத்தை முன்னிலைப்படுத்துகிறது. எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம் என்றில்லை. சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன். அப்படி ஆகிவிட்டால் நன்றாக சாப்பிடுவேன். அதேபோல் காரை எடுத்துக்கொண்டு தனியாக ட்ரைவ் செய்வேன், அப்போது நல்ல மியூசிக் கேட்பேன். அதுமட்டுமின்றி, வீட்டில் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். என்ன அப்செட் வந்தாலும் அவன் முகத்தை பார்த்தால் போதும் அவை அனைத்தும் காணாமல் போய்விடும்'' என்றார்.