பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
சென்னை வைஷ்ணவா கல்லூரி மாணவியான பவ்யா திரிகா 'கதிர்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ரியோ ராஜ் ஜோடியாக நடித்த 'ஜோ' படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது வெளியாகி உள்ள 'பன் பட்டர் ஜாம்' படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "பன் பட்டர் ஜாம் படத்தில் நான் நடித்திருந்த நந்தினி கேரக்டர் ரசிகர்களையும், விமர்சகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இன்றைய இளம் பெண்களை அந்த கேரக்டர் பிரதிபலித்ததே அதற்கு காரணம். இதற்கு முன் பல வாய்ப்புகள் வந்தபோதும் அதனை தவிர்த்தேன். வழக்கமான, ஜீவன் இல்லாத ஹீரோயின் கதாபாத்திரங்களைத் தவிர்த்து, உண்மையான நடிப்பு திறமை வெளிப்படும் கதாபாத்திரத்திற்காக காத்திருந்தேன். அதனால் சிறு இடைவெளியும் ஏற்பட்டது" என்றார்.