ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

சென்னை வைஷ்ணவா கல்லூரி மாணவியான பவ்யா திரிகா 'கதிர்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ரியோ ராஜ் ஜோடியாக நடித்த 'ஜோ' படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது வெளியாகி உள்ள 'பன் பட்டர் ஜாம்' படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "பன் பட்டர் ஜாம் படத்தில் நான் நடித்திருந்த நந்தினி கேரக்டர் ரசிகர்களையும், விமர்சகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இன்றைய இளம் பெண்களை அந்த கேரக்டர் பிரதிபலித்ததே அதற்கு காரணம். இதற்கு முன் பல வாய்ப்புகள் வந்தபோதும் அதனை தவிர்த்தேன். வழக்கமான, ஜீவன் இல்லாத ஹீரோயின் கதாபாத்திரங்களைத் தவிர்த்து, உண்மையான நடிப்பு திறமை வெளிப்படும் கதாபாத்திரத்திற்காக காத்திருந்தேன். அதனால் சிறு இடைவெளியும் ஏற்பட்டது" என்றார்.




