நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து, 77 காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(ஜூலை 19) காலை அவரது உயிர் பிரிந்தது.
கருணாநிதி - பத்மாவதி தம்பதியரின் மூத்த மகனான முத்து, 1948ம் ஆண்டு ஜனவரி 14ல் பிறந்தார். தந்தை கருணாநிதியின் கலையுலக வாரிசாக திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டார். பூக்காரி, அணையா விளக்கு, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். நடிப்பு திறமையையும் கடந்து சொந்த குரலில் பாடியும் இருக்கிறார். மறைந்த கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக, அவரை விட்டு பிரிந்தார். பல காலமாக தனித்து வாழ்ந்து வந்தார்.
கடைசியாக 2012ம் ஆண்டு வெளியான ‛மாட்டுத்தாவணி' படத்தில் தேவா இசையில் ‛அன்னமாரே....' என்ற பாடலை பாடினார் முத்து. அதுவே அவரின் திரையுலக பயணத்தின் கடைசி பயணமாக அமைந்தது.
இந்நிலையில் இன்று காலமானார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தனது சகோதரர் முத்துவின் உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் முத்துவின் உடல் சென்னை, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.