'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
சூப்பர் குட் நிறுவனத்தை 1990ல் தொடங்கினார் ஆர்.பி.சவுத்ரி. புதுவசந்தம் தொடங்கி ஏகப்பட்ட படங்களை தயாரித்தார். அவர் தமிழராக இல்லாவிட்டாலும், தமிழில் அதிக புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற பெருமையை பெற்றார். இப்போது ரவி அரசு இயக்கத்தில் விஷால், துஷாரா விஜயன் நடிக்கும் படம், சூப்பர் குட் நிறுவனத்தின் 99வது படம்.
இந்நிலையில், பலருக்கும் எழுகிற கேள்வி, இந்த நிறுவனத்தின் 100வது படத்தை இயக்குவது யார்? தயாரிப்பது யார் என்பதுதான். சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் குட் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்பட்டது. அதை ஆர்.பி.சவுத்ரி மகனான ஜீவாவும் உறுதிப்படுத்துவது போல பேசி வந்தார். ஆனால், விஜய் சம்பளத்தை கேட்ட ஆர்.பி.சவுத்ரி, அந்த தொகை கொடுத்தால் நஷ்டம் உறுதி, அவர் கால்ஷீட் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். விஜயும் வேறு தயாரிப்பாளர் பக்கம் போய் விட்டார். இப்போது 100வது படத்தில் நடிப்பது யார் என்பது கேள்வியாக இருக்கிறது. தமிழில் மார்டன் தியேட்டர்ஸ், ஏவிஎம் போன்ற சில நிறுவனங்களே 100 படங்களை தயாரித்து இருக்கின்றன. அந்த பெருமையை விரைவில் சூப்பர் குட் பெற உள்ளது.