கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 2015ம் ஆண்டில் பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு 2017ம் ஆண்டில் பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகி உலகளவில் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனையை நிகழ்த்தியது.
இந்த நிலையில் பாகுபலி முதல்பாகம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக பாகுபலி படங்களின் இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே பாகமாக, ஒரே படமாக படத்தொகுப்பு செய்து 'பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் அக்டோபர் 31ம் தேதியன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இதுபற்றி ராஜமவுலி வெளியிட்ட பதிவில், ‛‛பாகுபலி… எண்ணற்ற நினைவுகள். முடிவில்லா உத்வேகம். 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த சிறப்பான மைல்கல்லில் பாகுபலி தி எபிக் என்ற பெயரில் பாகுபலி படத்தின் இரு பகுதிகளை ஒன்றாக இணைத்து அக்., 31ல் வெளியிடுகிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.