சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 2015ம் ஆண்டில் பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு 2017ம் ஆண்டில் பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகி உலகளவில் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனையை நிகழ்த்தியது.
இந்த நிலையில் பாகுபலி முதல்பாகம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக பாகுபலி படங்களின் இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே பாகமாக, ஒரே படமாக படத்தொகுப்பு செய்து 'பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் அக்டோபர் 31ம் தேதியன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இதுபற்றி ராஜமவுலி வெளியிட்ட பதிவில், ‛‛பாகுபலி… எண்ணற்ற நினைவுகள். முடிவில்லா உத்வேகம். 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த சிறப்பான மைல்கல்லில் பாகுபலி தி எபிக் என்ற பெயரில் பாகுபலி படத்தின் இரு பகுதிகளை ஒன்றாக இணைத்து அக்., 31ல் வெளியிடுகிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.