23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 2015ம் ஆண்டில் பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு 2017ம் ஆண்டில் பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகி உலகளவில் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனையை நிகழ்த்தியது.
இந்த நிலையில் பாகுபலி முதல்பாகம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக பாகுபலி படங்களின் இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே பாகமாக, ஒரே படமாக படத்தொகுப்பு செய்து 'பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் அக்டோபர் 31ம் தேதியன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இதுபற்றி ராஜமவுலி வெளியிட்ட பதிவில், ‛‛பாகுபலி… எண்ணற்ற நினைவுகள். முடிவில்லா உத்வேகம். 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த சிறப்பான மைல்கல்லில் பாகுபலி தி எபிக் என்ற பெயரில் பாகுபலி படத்தின் இரு பகுதிகளை ஒன்றாக இணைத்து அக்., 31ல் வெளியிடுகிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.