சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

மலையாள திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக நடித்து வருபவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், ஷைன் டான் சாக்கோவுடன் 'சூத்ரவாக்யம்' படத்தில் நடித்த சக நடிகையான வின்சி அலோசியஸ் என்பவர், படப்பிடிப்பிலேயே ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்ள முயற்சித்தார் என குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி சாக்கோ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே சாக்கோவின் தந்தை விபத்தில் உயிரிழந்தார். அடுத்தடுத்த சம்பவங்களால் மனமுடைந்திருந்தார் சாக்கோ. இந்த நிலையில், ஷைன் டாம் சாக்கோ உடன் வின்சி அலோசியஸ் நடித்த 'சூத்ரவாக்யம்' படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. யூஜின் ஜோஸ் சிரம்மள் இயக்கியுள்ள இப்படம் வரும் ஜலை 11ல் ரிலீசாகிறது. இதற்கான புரோமோஷன் நிகழ்ச்சி ஷைன் டாம் சாக்கோ, யூஜின் ஜோஸ், வின்சி அலோசியஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவர் முன்னிலையில் வின்சியிடம் மன்னிப்பு கோரினார் ஷைன் டாம் சாக்கோ. நேர்காணல்களின் போதும், படப்பிடிப்புத்தளத்திலும் 'பொழுதுபோக்கு' என்ற பெயரில் தான் அடிக்கடி இப்படி 'அதீதமாக' நடந்து கொண்டதற்காக வருத்தம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய வின்சி, தங்களுக்கிடையே வேறு எந்தப் பிரச்னைகளும் இல்லை என்று தெரிவித்தார்.
ஷைன் டாம் சாக்கோவின் வெளிப்படையான மன்னிப்பும் அங்குள்ள திரைக்கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்வில் நல்ல மாற்றங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




