Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: எம்ஜிஆரின் நிறைவேறாத கனவு

03 ஜூலை, 2025 - 12:59 IST
எழுத்தின் அளவு:
Flashback-MGRs-unfulfilled-dream


1950ம் ஆண்டு முதல் 1954ம் ஆண்டு வரை, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'பொன்னியின் செல்வன்' கதை, வார இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களின் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர், 5 பாகங்கள் கொண்ட புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தின் வியாபாரமும் விண்ணைத் தொட்டது. சோழ தேசத்தில் நடக்கும்படியாக எழுதப்பட்ட இந்தக் கதைக்குள் இருந்த சுவாரஸ்யத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர், 1958ம் ஆண்டு, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து 'பொன்னியின் செல்வன்' கதையின் உரிமையைப் பெற்றார்.

அதன் பிறகு இயக்குனர் மகேந்திரனை அழைத்து அதற்கு திரைக்கதை எழுதச் சொன்னார்; அவரும் எழுதிக் கொடுத்தார். சில இயக்குநர்களை அணுகியபோது இவ்வளவு பெரிய பிரம்மாண்ட படத்தை இயக்க தயங்கினர். இறுதியில் தானே தயாரித்து இயக்குவதாக முடிவெடுத்தார். அதோடு வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் தானே நடிக்கவும் முடிவு செய்தார்.

ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி, நம்பியார், எம்.என்.ராஜம், டி.எஸ். பாலையா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைப்பது என்றும், ஜி.கே. சாமு ஒளிப்பதிவு செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது. 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' அளிக்கும் 'பொன்னியின் செல்வன்' போஸ்டர்கூட வெளியிடப்பட்டது.

ஒருநாள், காரில் சென்றபோது, எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து குணமடைய 6 மாதங்கள் ஆனது. குணமடைந்ததும் தனது படத்தில் நடிப்பதை விட பாதியில் நிற்கும் மற்றவர்களின் படத்தை நடித்து முடித்துக் கொடுக்க விரும்பினார். 'மலைநாட்டு இளவரசன்', 'சிரிக்கும் சிலை', 'சிலம்புக் குகை', 'தூங்காதே தம்பி தூங்காதே' ஆகிய 4 படங்களை நடித்துக் கொடுத்தார். இந்தப் படங்களை நடித்து முடிப்பதற்கு உள்ளாகவே மேலும் நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இதனால் அவரால் பொன்னியின் செல்வன் கதை பக்கம் செல்ல முடியவில்லை.

மீண்டும் நான்கு வருடங்களுக்குப் பிறகு மேலும் பணம் கொடுத்து கதை உரிமையை புதுப்பித்துக் கொண்டார். ஆனாலும் அவரால் பொன்னியின் செல்வன் படத்தை கடைசி வரை இயக்க முடியவில்லை. அவர் ஆசைப்பட்ட வந்திய தேவன் கேரக்டரிலும் நடிக்க முடியவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காதலர் பிரிவுக்கு பின் மீண்டும் சினிமாவில் முழு வேகத்தில் தமன்னாகாதலர் பிரிவுக்கு பின் மீண்டும் ... பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in