'ஜனநாயகன்' டிரைலரை பின்னுக்குத் தள்ளிய 'பராசக்தி' டிரைலர், எழுந்த சர்ச்சை | 'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? |

யுடியூப் சேனல்களில் நடிகர் நடிகைகள் குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் ஆதாரம் இல்லாத அவதூறு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில், ‛‛தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவது, பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் எங்கள் தலையாய கடமை. எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும், அடிப்படை ஆதாரம் ஏதும் இன்றி பல தவறான பொய்யான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த சேகுவாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜெய்சங்கர் என்பவர் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சட்ட ரீதியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். அந்த வழக்கின் கடுமையை உணர்ந்து இனி எந்தவித அவதூறான செய்திகளையும் பதிவிட மாட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டவர் உறுதிமொழி தந்து நீதிமன்றத்தில் ஒரு மனு சமர்ப்பித்தார். அதனை ஏற்ற நீதிமன்றம் அந்த உறுதி மொழியில் இருந்து அவர் தவறக் கூடாது என்ற கடுமையான உத்தரவின் அடிப்படையில் அந்த நபருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.
இதனைத்தொடர்ந்து சில காலம் அவதூறுகள் ஏதும் வெளிவராத நிலையில் சமீபகாலமாக மீண்டும் பயில்வான் ரங்கநாதன் என்னும் நபர் உட்பட பலரும் எங்கள் சங்கத்தின் பல உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இப்படி அவதூறு பரப்புபவர்கள் மேற்காணும் வழக்கை மனிதில் கொண்டு உடனடியாக அவர்களது சட்டவிரோத செயலை நிறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அவதூறு பரப்பும் அனைவர் மீதும் கடந்த நபரை விட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுக்கிறது. இனி ஒரு முறை எங்கள் உறுப்பினர்கள் தொடர்பான ஆபாசமான அவதூறான கருத்துக்களை பதிவேற்றம் செய்பவர்கள் தாமதமின்றி சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.