ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
போதைப் பொருளான கோகைன் பயன்படுத்தியது மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக, நடிகர் ஸ்ரீகாந்த், 46, கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீகாந்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் சில சினிமா பிரபலங்களும் பெயரும் இந்த விஷயத்தில் அடிபடுகிறது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவும் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளார். இதுதொடர்பாக அவரை விசாரணைக்கு வரச் சொல்லி போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்ததாக சொல்லப்பட்டது. அதேசமயம் அவர் தலைமறைவானதாகவும் தகவல் வெளியாக அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் தனது வக்கீல் உடன் போலீஸ் விசாரணைக்கு கிருஷ்ணா ஆஜர் ஆனார். ரகசிய இடத்தில் நடந்த விசாரணையில் அவரிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டுள்ளனர். மேலும் அவர் போதை பொருள் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.