மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

'அமரன்' படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில், மகராஸி படத்தில் அவருடன் ருக்மணி வசந்த், பிஜூ மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் காக்கிச்சட்டை படத்திற்குப் பிறகு மீண்டும் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மதராஸி படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 23 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.