பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? |
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா மற்றும் பலர் நடிக்க 'பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, இலங்கை என விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த ஓரிரு மாதங்களாக படப்பிடிப்பு நின்று போய் இருந்தது.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய மற்றொரு படமான 'மதராஸி' படத்தை முடித்துக் கொடுக்க சிவகார்த்திகேயன் போய்விட்டார் என்றார்கள். அதற்கடுத்து அமலாக்கத்துறை விசாரணையில் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கியதும் படப்பிடிப்பை மீண்டும் தாமதப்படுத்தியதாகச் சொன்னார்கள். தற்போது வழக்கிலிருந்து விடுபட்டுள்ளதால் 'பராசக்தி' உள்ளிட்ட தன்னுடைய மற்ற பட வேலைகளை ஆகாஷ் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.