கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்தை வைத்து 'தீனா' என்கிற படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து விஜயகாந்த், சூர்யா, விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து மாறி மாறி படம் இயக்கியவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்தை வைத்து 'தர்பார்' படத்தை இயக்கினார். அது மட்டுமல்ல பாலிவுட்டில் அமீர்கானை வைத்து கஜினி படத்தின் ரீமேக்கை இயக்கியவர் சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான 'சிக்கந்தர்' படத்தையும் இயக்கினார். அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து இவர் இயக்கி வரும் 'மதராஸி' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
பொதுவாகவே ஏ.ஆர் முருகதாஸ் பிரபல இயக்குனராக மாறினாலும் கூட எந்த பந்தாவும் இல்லாமல் பார்ப்பதற்கு எளிமையான தோற்றத்தில் வெகு இயல்பாக இருப்பார். அதுவே அவருக்கு பல இடங்களில் அசவுகரியங்களையும் அவமதிப்புகளையும் கொடுத்திருக்கிறது. இது குறித்து அவருடன் சில படங்களில் இணைந்து பணியாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை கூறியுள்ளார்.
“கஜினி படத்தின் கதை விவாதத்திற்காக சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் தனியாக ஒரு அறை போடப்பட்டிருந்தது. அங்கே கதை விவாதம் செய்வதற்காக நான் வருவேன். என்னை உள்ளே அனுமதித்து விடுவார்கள். ஆனால் ஏ.ஆர் முருகதாஸ் வரும்போது அவரது தோற்றத்தை பார்த்து நீங்கள் உள்ளே செல்லக்கூடாது என்று ஊழியர்கள் அவரை வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடுவார்கள். அவர் இந்த ஹோட்டலில் எனக்கு அறை இருக்கிறது என்று சொன்னாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள். நான் அவர்களிடம் என்னை மட்டும் உள்ளே அனுமதிக்கிறீர்களே என்று கேட்டதற்கு நீங்கள் பிரெஞ்ச் தாடி எல்லாம் வைத்து பார்ப்பதற்கு ரிச்சாக இருக்கிறீர்கள் என்று காரணம் கூறினார்கள். அதன் பிறகு இவர்தான் படத்தின் இயக்குனர் என்று கூறி, அவரை உள்ளே அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது.
இங்கு மட்டுமல்ல ஹிந்தியில் அமீர்கான் நடிப்பில் கஜினி படத்தை இயக்கியபோது கூட இதுபோன்று சங்கடங்களை சந்தித்தார் ஏ.ஆர் முருகதாஸ். படப்பிடிப்பின் துவக்க நாட்களில் பிடிப்பு தளத்திற்கு முருகதாஸ் மட்டும் தனியாக உள்ளே வந்தால் அங்கு இருக்கும் பாதுகாப்பு பவுன்சர்கள் அவரை யார் என்று சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளே நுழைய அனுமதி மறுத்தனர். அவரை இயக்குனர் என்று நம்ப மறுத்தனர். காரணம் அவர் தோற்றம் அவ்வளவு எளிமையாக இருந்தது.
அதன் பிறகு தான் அவரிடம், இயக்குனர் என்றால் கட்டாயம் ஒரு பந்தா தேவை என்று கூறி அவர் செல்வதற்கு முன்பாகவே அவரது உதவி இயக்குனர்களை வழி விடுமாறு கூறினேன். பின்னர் முருகதாஸை அவர்களின் பின்னால் செல்லும்படி கூறினேன். அதனால்தான் மற்றவர்களும் இவர் இயக்குனர் தானா என்று அவரை தடுக்காமல் வழி விட்டனர். அது மட்டுமல்ல ஸ்டார் ஹோட்டலுக்கு வரும்போது கூட அவர் சாதாரண சிறிய ரக காரில்தான் வருவார். அதனாலேயே அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ள நிகழ்வுகளும் நடந்துள்ளது” என்று கூறியுள்ளார் ரவி கே சந்திரன்.