ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள ‛தக் லைப்' படம் ஜுன் 5ல் ரிலீஸாகிறது. இப்பட இசை வெளியீட்டு விழாவில் ‛‛தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது'' என கமல் பேசினார். இது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்த அங்கு படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கமல் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறியுள்ளார்.
இதனால் கர்நாடகாவில் தக் லைப் படத்தை திரையிட மாட்டோம் என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தெரிவித்தது. இதனிடையே கோர்ட் மூலம் படத்தை வெளியிட கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கமல். ஆனால் கமலுக்கு எதிராக நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதோடு அவர் மன்னிப்பு கேட்க மதியம் 2:30 மணிவரை கெடு விதித்தது.
இப்பிரச்னை தொடர்பாக கர்நாடகா வர்த்தக சபைக்கு கமல் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‛‛தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அன்பின் மிகுதியால் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். கன்னட மொழியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை.
தமிழைப் போலவே, கன்னடமும் ஒரு பெருமைமிக்க இலக்கிய மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தைக் கொண்டது. அதை நான் எப்போதும் பாராட்டியே வந்திருக்கிறேன். எனக்கு மொழியால் அன்பு உண்டு. எனக்கு மொழிகள் உடனான பிணைப்பு ஆழமானது. எந்த மொழியையும் தாழ்த்தி பார்க்கும் எண்ணம் இல்லை. எனது பேச்சு அனைவரையும் ஒருங்கிணைக்கவும், அன்பையும் ஒற்றுமையையும் நிலைநாட்டவும் மட்டுமே இருந்தது.
திரைப்படம் மக்களிடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக் கூடாது. இதுவே எனது பேச்சின் உண்மையான நோக்கம். பொது அமைதியின்மை மற்றும் பகைமைக்கு எந்த இடத்தையும் நான் ஒருபோதும் அளிக்க விரும்பவில்லை. இந்த தவறான புரிதல் தற்காலிகமானது. நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
கமலுக்கு என்ன ஈகோ
இந்த கடிதத்தை மதியம் 2:30 மணிக்கு நடைபெற்ற விசாரணையின்போது கமல் தரப்பில் சமர்பிக்கப்பட்டது. இதனை படித்த நீதிபதி, ''கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை. தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்காமல் கமல் ஏன் சுற்றி வளைத்து பேசுகிறார்? மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ? கன்னட மக்களின் உணர்வுகளை கமல் குறைத்து மதிப்பிடுகிறார். பிரச்னையின் தீவிரத்தை அவர் உணர வேண்டும்; படத்தை விட இந்தியாவின் ஒற்றுமையே பெரிது'' என்றார்.
ரிலீஸ் ஒத்திவைப்பு
இதனையடுத்து, கமல் தரப்பில், ''கர்நாடகாவில் மட்டும் தக்லைப் படம் ரிலீஸ் செய்வது தள்ளிவைக்கப்படுகிறது'' எனக் கூறப்பட்டது. பட ரிலீஸை தள்ளிவைத்ததை அடுத்து, வழக்கையும் நீதிபதி ஒத்திவைத்தார்.