பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த 2017ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் நித்திலன் சுவாமிநாதன். அந்த படத்தில் விதார்த், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பின்னர் கடந்தாண்டு மகாராஜா என்ற படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பாக்ஸ் ஆபிஸில் 190 கோடி வசூலித்தது. அதையடுத்து சீன மொழியிலும் வெளியிடப்பட்டு பெரிய அளவில் வசூலித்தது.
இந்த நிலையில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை நியூயார்க்கில் ஆஸ்கர் விருது பெற்ற பேடு மேன் என்ற படத்தின் ரைட்டர் அலெக்சாண்டர் டினெலாரிஸ் என்பவர் அழைத்து பாராட்டி இருக்கிறார். இது குறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நித்திலன் சுவாமிநாதன், ‛‛இது போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. வீட்டுக்கே என்னை அழைத்து அன்பு காட்டியதற்கு மிக்க நன்றி'' என்று ஒரு பதிவு போட்டு உள்ளார்.