'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

சசி இயக்கிய 'பூ' படத்தில் மலையாள நடிகையான பார்வதி ஹீரோயினாக நடித்தார். அவர் நடித்த சிறந்த படங்களில் அதுவும் ஒன்றாகிவிட்டது. இன்றும் அவரை பலரும் பூ பார்வதி என்று அழைக்கின்றனர். அடுத்து அவர் இயக்கிய 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் லிஜோமோல் ஜோஸ் சிறப்பாக நடித்தார். 'பிச்சைக்காரன்' படத்தில் சாத்னாவும், 'டிஷ்யூம்' படத்தில் சந்தியாவும் ஹீரோயினாக நடித்திருந்தனர். அவர் படங்களில் நடித்த இந்த மலையாள நடிகைகளுக்கு தனி மவுசு ஏற்பட்டது.
இந்நிலையில், சசி இயக்கத்தில் மீண்டும் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில் 'லப்பர் பந்து, மாமன்' படங்களில் நடித்த மலையாள நடிகையான சுவாசிகா முக்கியமான வேடத்தில் வருகிறார். இது விஜய் ஆண்டனி, அவர் மருமகன் அஜய் இணைந்து நடிக்கும் இரட்டை ஹீரோ கதையாம். தமிழ்நாட்டின் வட மாவட்டத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. அதனால், இந்த படம் பிச்சைக்காரனின் அடுத்த பாகமாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.




