என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சசி இயக்கிய 'பூ' படத்தில் மலையாள நடிகையான பார்வதி ஹீரோயினாக நடித்தார். அவர் நடித்த சிறந்த படங்களில் அதுவும் ஒன்றாகிவிட்டது. இன்றும் அவரை பலரும் பூ பார்வதி என்று அழைக்கின்றனர். அடுத்து அவர் இயக்கிய 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் லிஜோமோல் ஜோஸ் சிறப்பாக நடித்தார். 'பிச்சைக்காரன்' படத்தில் சாத்னாவும், 'டிஷ்யூம்' படத்தில் சந்தியாவும் ஹீரோயினாக நடித்திருந்தனர். அவர் படங்களில் நடித்த இந்த மலையாள நடிகைகளுக்கு தனி மவுசு ஏற்பட்டது.
இந்நிலையில், சசி இயக்கத்தில் மீண்டும் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில் 'லப்பர் பந்து, மாமன்' படங்களில் நடித்த மலையாள நடிகையான சுவாசிகா முக்கியமான வேடத்தில் வருகிறார். இது விஜய் ஆண்டனி, அவர் மருமகன் அஜய் இணைந்து நடிக்கும் இரட்டை ஹீரோ கதையாம். தமிழ்நாட்டின் வட மாவட்டத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. அதனால், இந்த படம் பிச்சைக்காரனின் அடுத்த பாகமாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.