பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ருக்மணி வசந்த். அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி படத்தில் நடித்து வருகிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் சரளமாக தமிழ் பேசுகிறார். ஏஸ் படம் பெரிய ஹிட் ஆகாவிட்டாலும் ருக்மணி நடிப்பு, அழகு பலரை கவர்ந்துள்ளது. அதனால், அடுத்த ஆண்டு அவர் பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு.
ராணுவ குடும்பத்தை சேர்ந்தவர் ருக்மணி. அவர் தந்தை வசந்த் வேணுகோபால் தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர். உயரிய ராணுவ விருது பெற்றவர். ராணுவ குடும்பங்களுக்கு உதவி வருகிறார் பரதநாட்டிய கலைஞரான அவர் தாய். இதற்குமுன்பு கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் ருக்மினி. அதனால், நல்ல கதை, நல்ல கேரக்டரில் மட்டுமே நடிப்பது என அவர் முடிவெடுப்பாராம்.
தமிழில் ஹீரோயினாக இருக்கும் நயன்தாரா, திரிஷா, தமன்னா போன்ற பலர் ஒரு வயதை தாண்டிவிட்டதால் ருக்மினி, கயாடு லோஹர், மமிதா பைஜூ போன்றவர்களுக்கு கோலிவுட்டில் மவுசு உருவாகி உள்ளது.