300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்த 'தக் லைப்' படம் ஜூன் 5ல் ரிலீசாகிறது. இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே 24) நடைபெற்றது. இதில் நடிகர் சிம்பு பேசியதாவது: சிறுவயதில் எல்லா பசங்களையும் வெளியே அழைத்துச் செல்வார்கள். சாக்லேட் வாங்கித் தருவார்கள். ஆனால் பிறந்தது முதலே எனக்கு நடிக்கச் சொல்லிக் கொடுத்தார்கள். அப்போதெல்லாம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். மற்ற பசங்க எல்லாம் ஜாலியாக இருக்கும்போது நாம மட்டும் ஒரு பக்கம் ஷூட்டிங், இன்னொரு பக்கம் படிப்பு என்று கஷ்டப்படுகிறோமே என்று நினைப்பேன்.
சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் இன்று 40 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு காரணம் என் அம்மா, அப்பா தான். என் அப்பாவை இங்கே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். காரணம் அவர் மிகவும் எமோஷனல் ஆகிவிடுவார். ஆனால் நானே இங்கு எமோஷனல் ஆகிவிட்டேன்'' என கண்கலங்கி பேசினார்.
மேலும் சிம்பு பேசுகையில், ‛‛இந்த படத்தில் நான் பேசிய ஒரு டயலாக்கை வைத்து சமூக வலைதளங்களில் கமல் சாருக்கு அடுத்து சிம்புதான் அந்த இடத்தை பிடிக்கப் போகிறார் எனப் பேசுகின்றனர். ‛தேவர் மகன்' படத்தில் சிவாஜியும் கமலும் நடித்திருந்தனர். அப்படியென்றால் சிவாஜி இடத்தை கமல் பிடித்துவிட்டார் என அர்த்தமல்ல. சிவாஜி கணேசன் மிகப்பெரிய ஆளுமை. அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.
அதே போல கஷ்டப்பட்டு, உழைத்து, நெட்டையாக, குட்டையாக, அசிங்கமாக, அழகாக விதவிதமாக நடித்துதான் கமல்ஹாசன் தனக்கான இடத்தை பிடித்தாரே தவிர யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. இளம் தலைமுறையினர் தன்னுடைய தோளில் ஏறிச் செல்லுங்கள் என்று ஒரு பேட்டியில் அவர் சொல்லியிருந்தார். நான் அவரை ஒரு ஏணியாக பார்க்கிறேன். அவரை மதித்துதான் மேலே செல்வேனே தவிர, மிதித்து அல்ல'' எனப் பேசினார்.