தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
'இமைக்கா நொடிகள்' மூலமாக தமிழில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணா, தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4, அகத்தியா படங்களில் நடித்தார். தற்போது 'பார்ஜி-2' என்ற ஹிந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் ஆக்ஷன் நாயகியாக நடிக்கும் ராஷி கண்ணா கடந்த சில நாட்களாக சண்டை காட்சியில் நடித்து வருகிறார்.
நேற்று நடந்த படப்பிடிப்பில் ராஷி கண்ணா உயரமான மேடை ஒன்றில் இருந்து கீழே குதித்தார். இதில் டைமிங் மிஸ்சாகி தரையில் விழுந்தார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. உள்காயத்தால் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. கை மற்றும் கால்களிலும் காயம் ஏற்பட்டது.
முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மருத்துமனையில் சிகிச்சை பெற்றார். சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ராஷிகா இல்லாத காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராமில், "சில கதாபாத்திரங்களுக்கு தேவையானதை செய்துதான் ஆக வேண்டும். ஏற்படும் காயங்களை பொருட்படுத்தக்கூடாது. நாமே புயல் ஆன பிறகு, இடி-மின்னல் என்ன செய்துவிடும்?", என்று பதிவிட்டுள்ளார்.