சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

'பாகுபலி 1, 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் பெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் டாப் இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் ராஜமவுலி. தற்போது மகேஷ்பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். சர்வதேச அளவில் கொண்டு போய் சேர்க்கும் அளவிலான படமாக இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார்கள்.
இதனிடையே, தனது கனவுப்படமான 'மகாபாரதம்' பற்றிய அப்டேட் ஒன்றை சமீபத்தில் நடந்த 'ஹிட் 3' பட விழாவில் தெரிவித்திருந்தார். 'மகாபாரதம்' படத்தில் நானி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி என்று கூறியிருந்தார். அதையடுத்து 'மகாபாரதம்' பற்றிய சில செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.
அப்படத்தை 10 பாகங்களாக எடுக்க ராஜமவுலி திட்டமிட்டிருந்தார் என்று முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படத்தை மூன்று பாகங்களாக மட்டுமே உருவாக்க உள்ளோம் என ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். படத்திற்கான திரைக்கதை வடிவத்தை அவர்தான் எழுதி வருகிறார்.
மகேஷ்பாபு நடிக்கும் படத்தை எடுத்து முடித்த பின் 'மகாபாரதம்' படத்தின் வேலைகளில் ராஜமவுலி இறங்குவார் என்றும் தெரிகிறது.