'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
'பாகுபலி 1, 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் பெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் டாப் இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் ராஜமவுலி. தற்போது மகேஷ்பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். சர்வதேச அளவில் கொண்டு போய் சேர்க்கும் அளவிலான படமாக இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார்கள்.
இதனிடையே, தனது கனவுப்படமான 'மகாபாரதம்' பற்றிய அப்டேட் ஒன்றை சமீபத்தில் நடந்த 'ஹிட் 3' பட விழாவில் தெரிவித்திருந்தார். 'மகாபாரதம்' படத்தில் நானி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி என்று கூறியிருந்தார். அதையடுத்து 'மகாபாரதம்' பற்றிய சில செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.
அப்படத்தை 10 பாகங்களாக எடுக்க ராஜமவுலி திட்டமிட்டிருந்தார் என்று முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படத்தை மூன்று பாகங்களாக மட்டுமே உருவாக்க உள்ளோம் என ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். படத்திற்கான திரைக்கதை வடிவத்தை அவர்தான் எழுதி வருகிறார்.
மகேஷ்பாபு நடிக்கும் படத்தை எடுத்து முடித்த பின் 'மகாபாரதம்' படத்தின் வேலைகளில் ராஜமவுலி இறங்குவார் என்றும் தெரிகிறது.