ஆக., 22ல் ரீ-ரிலீஸாகும் 'கேப்டன் பிரபாகரன்' | மம்முட்டி, பவன் கல்யாண் வரலாற்று படங்களின் இரண்டு இயக்குனர்களுக்கும் ஒரே போல நடந்த சோகம் | செல்போனை பறித்தாரா அக்ஷய் குமார் ? உண்மையை வெளியிட்ட லண்டன் ரசிகர் | 'டகோய்ட்' படப்பிடிப்பில் ஆத்வி சேஷ்-மிருணாள் தாக்கூர் காயம் | ஜிம்முக்கு போகாமலேயே 26 கிலோ எடை குறைத்த போனி கபூர் | ரஜினியின் 'கூலி': அமெரிக்காவில் ஐந்தே நிமிடத்தில் 15 லட்சம் ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன! | மாரீசன் பற்றி மனம் திறந்த பஹத் பாசில் | திருமணம் எப்போது? நித்யா மேனன் சொன்ன பதில் | செப்டம்பரில் தொடங்கும் 'பிக்பாஸ் சீசன்-9' | என்னால் 12 மணிநேரம் கூட பணிபுரிய முடியும்! - நடிகை வித்யா பாலன் |
2025 ஆரம்பித்து இதுவரை வெளிவந்த 70 படங்களில் நான்கைந்து படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அடுத்தடுத்து சில பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவருவதால் திரையுலகில் உள்ளவர்கள் ஒரு எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடந்த வாரம் அஜித் நடித்து வெளிவந்த 'குட் பேட் அக்லி' படம் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. படம் பற்றி இரு வேறு மாதிரியான விமர்சனங்கள் வந்தாலும் படம் தரும் வசூல் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் கோடை விடுமுறையில் வரும் படங்கள் எப்படியாவது வசூலை அள்ளித் தரும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு.
இந்த சம்மரில் மேலும் சில படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால் திரையுலக வட்டாரங்களில் ஆர்வத்துடன் உள்ளார்கள். ஜுன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ள 'தக் லைப்' படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியாகிவிட்டது. அடுத்து இசை வெளியீடு, டீசர், டிரைலர் என வர உள்ளது.
மே 1ம் தேதி வெளியாக உள்ள 'ரெட்ரோ' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது. நேற்று மாலை சென்னையில் அப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அடுத்த வாரம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக உள்ள சுந்தர் சி, வடிவேலு கூட்டணியின் 'கேங்கர்ஸ்' டிரைலர் வெளியீடு இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
அடுத்து மே மாதம் வெளியாக உள்ள மற்ற சில படங்களின் அப்டேட்டுகளும் அடுத்த வாரம் வரை வெளியாக இருக்கின்ற து. இதனால், தமிழ் சினிமா இந்த சம்மரில் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது என மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். வரும் முக்கிய படங்களும், நல்ல படங்களும் ஓடி வசூலைக் கொடுத்தால் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.