ஆக., 22ல் ரீ-ரிலீஸாகும் 'கேப்டன் பிரபாகரன்' | மம்முட்டி, பவன் கல்யாண் வரலாற்று படங்களின் இரண்டு இயக்குனர்களுக்கும் ஒரே போல நடந்த சோகம் | செல்போனை பறித்தாரா அக்ஷய் குமார் ? உண்மையை வெளியிட்ட லண்டன் ரசிகர் | 'டகோய்ட்' படப்பிடிப்பில் ஆத்வி சேஷ்-மிருணாள் தாக்கூர் காயம் | ஜிம்முக்கு போகாமலேயே 26 கிலோ எடை குறைத்த போனி கபூர் | ரஜினியின் 'கூலி': அமெரிக்காவில் ஐந்தே நிமிடத்தில் 15 லட்சம் ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன! | மாரீசன் பற்றி மனம் திறந்த பஹத் பாசில் | திருமணம் எப்போது? நித்யா மேனன் சொன்ன பதில் | செப்டம்பரில் தொடங்கும் 'பிக்பாஸ் சீசன்-9' | என்னால் 12 மணிநேரம் கூட பணிபுரிய முடியும்! - நடிகை வித்யா பாலன் |
மலையூர் மம்பட்டியான் வெற்றிக்கு பிறகு தியாகராஜன் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். அப்போதெல்லாம் இரண்டாம் பாக கலாச்சாரம் இல்லாததால் அதே பாணியில் இன்னொரு படம் உருவாக்க நினைத்தார் தியாகராஜன். அதுதான் 'கொம்பேறி மூக்கன்'. மம்பட்டியான் படத்தில் தியாகராஜன் ஜோடியாக நடித்த சரிதா இதிலும் நடித்தார். அதில் வில்லனாக நடித்த செந்தாமரை இதிலும் வில்லனாக நடித்தார். இவர்கள் தவிர ஊர்வசி, ஜெயந்தி, கவுண்டமணி, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஜெகநாதன் இயக்கினார். இளையராஜா இசையமைத்தார்.
மூக்கன் என்ற சிறுவன் தன் பெற்றோருடன் ஒரு கிராமத்தில் வசிக்கிறான். ஆளவந்தார் கிராமத்தில் ஒரு செல்வந்தரும் செல்வாக்கு மிக்கவருமாவார். அவர் ஒரு பெண் பித்தர். ஒரு இரவு, அவன் மூக்கனின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அவனது தாயை பாலியல் பலாத்காரம் செய்து, அவனது அடியாட்களின் உதவியுடன் அவனது தந்தையைக் கொன்று எரிக்கிறான்.
அவனது தாய் ஆரம்பத்தில் தற்கொலைக்கு முயற்சிக்கிறாள், ஆனால் சிறுவனைப் பார்த்ததும் தன் மனதை மாற்றிக் கொள்கிறாள், ஆளவந்தார் செய்த அநீதிக்குப் பழிவாங்க மகனை வீரனாக வளர்க்கிறார். அவன் தலையில் ஒரு கொண்டை போட்டு, வில்லனை பழிவாங்குகிற வரையில் அந்த கொண்டயை அவிழ்க்க கூடாது என்று நிபந்தனை விதிக்கிறாள். வளர்ந்து ஆளாகும் மூக்கன் எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் கதை.
இந்த படம் மலையூர் மம்பட்டியான் அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும், தயாரிப்பாளருக்கு லாபம் தந்த படம். தெலுங்கில் 'கால ருத்ரடு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.