'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இப்போதெல்லாம் பாலிவுட்டில் இருந்து வில்லன் நடிகர்களை தமிழுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு வில்லன் நடிகராக சென்றவர் தியாகராஜன்.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் வில்லனாக நடித்ததை தொடர்ந்து அவர் ஆக்ஷன் படங்களில்தான் நடித்தார். மலையூர் மம்பட்டியான், கொம்பேறி மூக்கன், எரிமலை, ராஜா யுவராஜா, முரட்டுக் கரங்கள் என ஆக்ஷனில் அதகளம் செய்து கொண்டிருந்தார்.
இப்படியான நேரத்தில்தான் மலையாளத்தில் வெளியான 'நியூ டெல்லி' படத்தில் வில்லனாக அறிமுகமானார். உடம்பு முழுவதும் சங்கிலியால் கட்டி திகார் சிறையில் தியாகராஜனை அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே பொறி பறக்கும். ஹீரோ மம்முட்டிக்கு கூட அப்படியொரு அறிமுகம் இல்லை. 'சேலம் விஷ்ணு' என்ற தமிழ் பேசும் கிரிமினலாக இதில் அவர் நடித்தார்.
படம் பெரிய வெற்றி பெறவே அதனை 'தெலுங்கில் 'அந்திம தீர்ப்பு' என்ற பெயரிலும், ஹிந்தி, கன்னடத்தில் 'நியூ டெல்லி' என்ற பெயரிலும் ரீமேக் செய்தனர். இந்த மூன்று ரீமேக்கிலும் நடித்த ஒரே நடிகர் தியாகராஜன் மட்டுமே. சேலம் விஷ்ணு கேரக்டரில் அவர்தான் நடித்தார்.
அதன்பிறகு 1990ம் ஆண்டு 'சேலம் விஷ்ணு' என்ற பெயரில் அவரே ஒரு படத்தை இயக்கி நடித்தார். இந்த வருடம்தான் அவரது மகன் நடிகர் பிரசாந்த் 'வைகாசி பொறந்தாச்சு' படத்தில் அறிமுகமானார்.