100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு | 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாட்டர் பாக்கெட்' | பிளாஷ்பேக்: மறைந்த நடிகை சரோஜா தேவியின் மறக்க முடியாத 50வது திரைப்படம் “இருவர் உள்ளம்” | வாயில் சுருட்டு உடன் சூர்யா... சமூக அக்கறை இது தானா : ரசிகர்கள் அதிர்ச்சி | சைனீஸ் உணவு சாப்பிட்டு விட்டு முத்தமிட வந்த நடிகரிடம் வித்யா பாலன் கேட்ட கேள்வி | ஐ அம் பேக் ; மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு திரும்பிய ஸ்ருதிஹாசன் | குடும்பத்துடன் நேரில் சென்று மோகன்லாலை சந்தித்த பஹத் பாசில் | தெலுங்கானா முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொன்ன துல்கர் சல்மான் |
தமிழ், மலையாளம் மட்டுமின்றி ஏராளமான மொழிகளில் பின்னணி பாடி வருபவர் கே.எஸ். சித்ரா. இவர், 1987ம் ஆண்டு விஜய சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து 2002ம் ஆண்டில் அவர்களுக்கு நந்தனா என்ற மகள் பிறந்தார். ஆனால் 2011ம் ஆண்டு தனது ஒன்பதாவது வயதிலேயே அவர் மரணம் அடைந்து விட்டார்.
இந்நிலையில் தனது மகளின் நினைவு நாளான நேற்று பாடகி சித்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'என்னால் உன்னை தொட முடியாது. உன் பேச்சைக் கேட்க முடியாது, பார்க்க முடியாது. ஆனால் நீ எப்போதுமே என் இதயத்தில் இருப்பதால் உன்னை என்னால் உணர முடிகிறது என் அன்பே. மீண்டும் நாம் ஒரு நாள் சந்திப்போம். உன்னை இழந்த வலியை அளவிட முடியாது. வானத்தில் பிரகாசிக்கும் மிகப்பெரிய நட்சத்திரம் நீ. படைப்பாளர்களின் உலகில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என நம்புகிறேன்,' என்று உருக்கமாக பதிவிட்டுருக்கிறார் பாடகி கே.எஸ்.சித்ரா.