தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் இன்று திரைக்கு வந்து அஜித் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு பிரபலங்களும் இந்த படம் வெற்றி பெற வாழ்த்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் மீடியாக்களை சந்தித்தார். அப்போது அவரிடத்தில், குட் பேட் அக்லி படம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார் . அதோடு கூலி படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடக்கிறது. இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. ஜெயிலர்-2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறிய ரஜினிகாந்த் , மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் ஒரு தூய்மையான அரசியல்வாதி. ரொம்ப நல்ல மனிதர். அவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.




