ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மலையாளியாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ரகுவரன். ஹீரோ, வில்லன், குணசித்ரம் என எல்லா வகையான நடிப்பிலும் தனக்கென தனி பாணியை கடை பிடித்தவர். நடிகை ரோகினியை திருமணம் செய்து, ஒரு மகனை பெற்று, பின்னர் அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்தவர்.
ரகுவரனின் வாழ்க்கையை மலையாள சினிமாவின் புகைப்பட கலைஞர் ஹாசிப் அபிதா ஹகீம் என்பவர் டாக்குமெண்டரியாக உருவாக்கி வருகிறார். இதற்கு 'ரகுவரன்: காலத்தை வென்ற கலைஞன்' என்று டைட்டில் வைத்துள்ளனர். ஏ.எச் எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ரகுவரனின் சாயலை கொண்ட அதுல்ஷரே என்பர் ரகுவரனாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில், ரோகிணி எழுத்தாளர் இந்துமதி, நிழல்கள் ரவி, ரகுவரனின் அம்மா, சகோதரர், மகன் ரிஷி ஆகியோர் ரகுவரன் குறித்து பேசி இருக்கிறார்கள். இந்த படத்தில் 60 சதவிகிதம் ரகுவரன் நேரடியாக தோன்றும் இதுவரை வெளிவராத வீடியோ காட்சிகள் இடம்பெறுகிறது. ரஜினியின் பேட்டிக்காக படக்குழு காத்திருக்கிறது. ரஜினி பேட்டி கிடைத்ததும் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.