பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு ஏராளமான படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தோட்டக்கலை பூங்காக்களில் கட்டணம் அடிப்படையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு சென்னையில் உள்ள தோட்டக்கலைத்துறை இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்காக்களில் ஒரு நாள் படப்பிடிப்பு கட்டணமாக 50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் ஒவ்வொரு ஆண்டு கோடை விடுமுறையின் போது மக்கள் அதிகமாக இந்த பூங்காக்களுக்கு வருவதால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அந்த காலகட்டத்தில் படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்படும்.
அந்த வகையில் இன்று (ஏப் 1)) முதல் ஜூன் 30ம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா உள்பட நீலகிரியில் உள்ள 8 தோட்டக்கலை பூங்காக்களிலும் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.