பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
ஒரு காலத்தில் வித்தியாசமான படங்களை இயக்கி வந்த ஸ்ரீதர், 80களில் வியாபார நோக்கம் கொண்ட கமர்ஷியல் படங்களை இயக்கினார். காதல், ஆக்ஷன் இந்த இரண்டும் அவரது பார்முலாவாக இருந்தது. அப்படி அவர் இயக்கிய படம்தான் 'துடிக்கும் கரங்கள்'. இந்த படத்தை கே.ஆர்.ஜி தயாரித்திருந்தார்.
ஒரு சில தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை அழைத்து இந்த படத்திற்கு இசை அமைக்கச் சொன்னார். ஆனால் முதலில் அவர் மறுத்தார். காரணம் தயாரிப்பாளர் கேஆர்ஜி சில ஆண்டுகளுக்கு முன்பே 'நீங்கள் இசை அமைத்தால் முதல் படமாக எனது படம் இருக்க வேண்டும்' என்றார். அதற்கு பாலசுப்பிரமணியமும் ஒப்புக் கொண்டிருந்தார். இதை கூறியே அவர் மறுத்தார்.
அப்படியென்றால் இந்த படத்திற்கு கேஆர்ஜியை தயாரிப்பாளராக்கி விடுகிறேன் என்று சொல்ல அப்படியே நடந்து, படம் தயாரானது. ஒரு கொடுமைக்கார எஸ்டேட் முதலாளிக்கும் அங்கு பணியாற்றும் ஊழியருக்கும் இடையிலான மோதல்தான் படத்தின் கதை. ரஜினி, ராதா, ஜெய்சங்கர், சுஜாதா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றது. அத்தனை பாடல்களும் ஹிட்டானது. என்றாலும் பாடல்களில் தெலுங்கு வாசனை அடிப்பதாக விமர்சிக்கப்பட்டது. அதன்பிறகு ஒரு சில படங்களுக்கு இசை அமைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பின்னர் பாடுவதில் மட்டும் கவனம் செலுத்தினார்.