சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம், மூத்த எழுத்தாளர்களை பாராட்டி கவுரவித்து வருகிறது. சமீபத்தில் சங்கத்தில் 203 கதைகளைப் பதிவு செய்து சாதனை படைத்திருத்த காரைக்குடி நாராயணனுக்கு பாராட்டு விழா நடத்தியது. அந்த வரிசையில் தற்போது திரையுலகில் 50 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்திருக்கும் பாடலாசிரியர் முத்துலிங்கத்திற்கும் பாராட்டு விழா நடத்துகிறது.
'முத்துக்கு முத்தான விழா' என்ற பெயரில் நடைபெறும் இந்த விழா நாளை (29ம் தேதி) மாலை நாரத கான சபாவில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் கே.பாக்யராஜ், துணை தலைவர்கள் ரவிமரியா, யார் கண்ணன், செயலாளர் லியாகத்தலிகான், பொருளாளர் பாலசேகரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
முத்துலிங்கம் 1973ம் ஆண்டு 'பொண்ணுக்கு தங்க மனசு' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் . அதன்பிறகு 47 இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.