கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம், மூத்த எழுத்தாளர்களை பாராட்டி கவுரவித்து வருகிறது. சமீபத்தில் சங்கத்தில் 203 கதைகளைப் பதிவு செய்து சாதனை படைத்திருத்த காரைக்குடி நாராயணனுக்கு பாராட்டு விழா நடத்தியது. அந்த வரிசையில் தற்போது திரையுலகில் 50 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்திருக்கும் பாடலாசிரியர் முத்துலிங்கத்திற்கும் பாராட்டு விழா நடத்துகிறது.
'முத்துக்கு முத்தான விழா' என்ற பெயரில் நடைபெறும் இந்த விழா நாளை (29ம் தேதி) மாலை நாரத கான சபாவில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் கே.பாக்யராஜ், துணை தலைவர்கள் ரவிமரியா, யார் கண்ணன், செயலாளர் லியாகத்தலிகான், பொருளாளர் பாலசேகரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
முத்துலிங்கம் 1973ம் ஆண்டு 'பொண்ணுக்கு தங்க மனசு' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் . அதன்பிறகு 47 இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.