நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? |
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்து வரும் மலையாள நடிகர் மம்முட்டி கடைசியாக கவுதம் மேனன் இயக்கத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி சுமாரான வெற்றி பெற்றது. இதையடுத்து மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்து வருகிறார் மம்முட்டி. இப்படத்தில் நயன்தாரா, பஹத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது.
இந்நிலையில் திடீரென்று நடிகர் மம்முட்டிக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதன் காரணமாக அவர் நடிப்பிலிருந்து விலகி விட்டதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வந்தது. ஆனால் இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து மம்முட்டியின் பிஆர்ஓ அந்த செய்தியை மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மம்முட்டிக்கு புற்றுநோய் இருப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை. தற்போது ரம்ஜானுக்கு நோன்பு இருப்பதால் நடிப்பில் இருந்து விலகி இருக்கிறார். நோன்பு முடிந்ததும் மீண்டும் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.