லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சூர்யா. அவருடன் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், ஜெயராம், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் வருகிற மே ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மௌனம் பேசியதே, ஆறு படங்களுக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். அதேபோல் ஷிவதா, சுவாசிகா, யோகி பாபு, நட்டி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் சூர்யா வக்கீல் வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அய்யனாராகவும் அவர் நடிப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தனது 45 வது படத்தின் சூர்யா இரண்டு விதமான வேடங்களில் நடிப்பது தெரியவந்துள்ளது. இந்த படம் ஆன்மீகம் கலந்த கதையில் உருவாகி வருகிறது.