ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தனுஷ் நடித்த 3 என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினி. அந்த படத்தில்தான் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு கவுதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். பின்னர் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்த லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் ரஜினியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படமும் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் தனது அடுத்த படத்தை புதுமுகங்களை வைத்து தயாரித்து இயக்கப் போவதாக கூறி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. அந்த புதிய படத்திற்கான கதையை தற்போது அவர் எழுதி முடித்து விட்டார். இதையடுத்து நேற்று திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினி, முருகன் திருவடியில் தன்னுடைய புதிய படத்தின் கதையை வைத்து தரிசனம் செய்துள்ளார். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன .