ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் |
பிரபல ஹாலிவுட் நடிகை மிச்செல் டிராட்சன்பெர்க். 1996ம் ஆண்டு வெளியான 'ஹாரியட் தி ஸ்பை' என்ற படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு இன்ஸ்பெக்டர் கெட்ஜெட், ஈரோ டிரிப், ஐஸ் பிரின்சஸ், பிளாக் கிறிஸ்துமஸ், காப் அவுட் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். பபி தி வாம்பயர் ஸ்லேயர், காசிப் கேர்ஸ் உள்ளிட்ட பல வெப் தொடர்களில் நடித்தும் புகழ் பெற்றார்.
39 வயதான மிச்செல் அமெரிக்காவில் உள்ள மான்ஹாட்டன் பகுதியில் வசித்து வந்தார். கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (26ம் தேதி) மிச்செல் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். மிச்செல் டிராட்சன்பெர்க் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இதேபோல பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேம்மேனும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. ஜீன் ஹேக்மேன் சூப்பர் மேன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். ஆஸ்கர்விருதுக்கு 5 முறை இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டு, இதில் அன்பர்கிவன், தி பிரெஞ்சு கனெக்சன் ஆகிய படங்களுக்காக ஆஸ்கார் விருதையும் பெற்றார்.
பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற இவர் மெக்சிகோவில் தனது மனைவி அரகாவுடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் மனைவியுடன் இறந்து கிடந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது சொத்துக்காக உறவினர்கள் கொலை செய்தார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.