பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சிவகுமார் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது ரசிகர் ஒருவர் அவர் அனுமதி இன்றி செல்பி எடுக்க முயன்ற போது சிவகுமார் அவரது செல்போனை தட்டிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல நடிகர் மம்முட்டி ஒரு முறை பிரார்த்தனை செய்வதற்காக மசூதிக்குள் நுழைந்த போது செல்பி எடுக்க முயன்ற ஒரு இளைஞரிடமிருந்து செல்போனை பறித்து வைத்துக் கொண்டு தொழுகை முடிந்த பின்னர் அவர்களிடம் கொடுத்து அறிவுரை கூறி அனுப்பிய சம்பவமும் நடைபெற்றது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூட விமான நிலையத்தில் இருந்து வெளிவந்த போது தன்னை அனுமதியின்றி படம் எடுக்க முயற்சித்த ரசிகரின் கையில் இருந்த செல்போனை தட்டி விட்டு சென்றார். சமீபகாலமாக இது போன்ற செல்போன் சம்பவங்கள் கொஞ்சம் குறைந்து இருந்து நிலையில் தற்போது மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இதுபோன்று ரசிகர் ஒருவரின் செல்போனை பறித்த சம்பவம் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் வெளியான 'கருடன்' படத்தில் வில்லனாக நடித்தவர் மலையாளம் நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு படங்களிலும் வில்லனாக நடித்துள்ள உன்னி முகுந்தன், சமீபத்தில் 'மார்கோ' என்கிற ஹிட் படத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவர் நடித்துள்ள கெட் செட் பேபி என்கிற திரைப்படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கொச்சியில் இந்த படம் ஓடும் திரையரங்கு ஒன்றிற்கு விசிட் அடித்தார் உன்னி முகுந்தன். படத்தைப் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு ரசிகர்களுடன் கலந்துரையாடி கிளம்பி சென்றுள்ளார்.
ஆனால் இப்படி அவர் தியேட்டருக்குள் வரும்போது உடன் வந்த ஒரு ரசிகர் ஒருவர் உன்னி முகுந்தனின் முகத்திற்கு அருகில் செல்போனை கொண்டு சென்று அவரை வீடியோ எடுக்க முயற்சி செய்தார். இதனால் கோபமான உன்னி முகுந்தன் சட்டென அவரிடம் இருந்து மொபைல் போனை பறித்து தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடந்து சென்றார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படி நடிகர்களின் அனுமதி இல்லாமல் ரொம்பவே அத்துமீறலாக புகைப்படம் எடுக்கும் ரசிகர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ?