எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' படத்தின் மூலம் 2014ம் ஆண்டு தமிழ் சினிமாவில் தயாரிப்புத் துறையில் இறங்கியது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். இங்கிலாந்தில் மொபைல் நெட்வொர்க் துறையில் பெரும் நிறுவனமாக இருந்த லைகா மொபைல் நிறுவனம், திரைப்படத் தயாரிப்பில் இறங்கியது. இலங்கைத் தமிழரான சுபாஷ்கரன் தான் அந்த நிறுவனங்களின் தலைவர்.
தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களை அந்நிறுவனம் தயாரித்தது. ரஜினிகாந்த் நடித்த '2.0', மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 1,2' , ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2', ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்', அஜித் நடிப்பில் சமீபத்தில் வந்த 'விடாமுயற்சி' என சில பெரிய படங்களைச் சொல்லலாம். மேலே குறிப்பிட்ட படங்கள் அனைத்துமே பெரிய லாபத்தை நிறுவனத்திற்குத் தரவில்லை என்று கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
தற்போது மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படத்தை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. அடுத்த மாதம் 27ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இது தவிர அவர்கள் அறிவித்த ஒரே படம் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாக உள்ள படம். அப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிப்பார் என்றார்கள். ஆனால், அப்படம் 'டேக் ஆப்' ஆகுமா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது என்கிறார்கள். தொடர் தோல்விகளால் நிறுவனம் தத்தளித்து வருகிறதாம்.
இந்நிறுவனத்தின் படங்களை புரமோஷன் செய்ய சமூக வலைத்தள குரூப்களை வைத்திருந்தார்கள். அவற்றை சமீபத்தில் 'டெலிட்' செய்துவிட்டார்கள். எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் இந்த குரூப்பை ஆரம்பிக்கிறோம் என சொல்லி இருக்கிறார்கள். அதோடு, 'விடாமுயற்சி'க்காக புரமோஷன் செய்ததற்கான தொகையையும் இதுவரை தரவில்லையாம்.
பெரும் கனவுகளுடன் தமிழ் சினிமாவிற்கு வந்து பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்த சுபாஷ்கரன், தயாரிப்பு நிறுவனத்திற்கான சரியான ஆட்களைத் தேர்வு செய்யவில்லை என்று அனுபவம் வாய்ந்த திரைத் துறையினர் தெரிவிக்கிறார்கள். அதனால்தான் இந்நிறுவனத்திற்கு இப்படி ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது என்பது அவர்களது கருத்தாக உள்ளது. தமிழ் சினிமாவில் இனி, '2.0, பொன்னியின் செல்வன், இந்தியன் 3' போன்ற பிரம்மாண்டமான படங்களைத் தயாரிக்க யார் முன் வருவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.