ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த ஆண்டில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தை நாடி இருக்கும் ஜெயம் ரவி, தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றி இருப்பவர், தனது அலுவலகத்தை மும்பைக்கு மாற்றி இருக்கிறார். அதோடு எதிர்காலத்தில் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கத்திலும் அவர் தீவிர கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது புதிய படங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ''வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'ஜீனி' படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. அதையடுத்து தற்போது 'பராசக்தி, கராத்தே பாபு' என்ற இரண்டு படத்தில் நடித்து வருகிறேன். இதில் பராசக்தி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளேன். இன்னொரு பக்கம் 'கராத்தே பாபு' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கணேஷ்பாபு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதத்தோடு முடிந்துவிடும்'' என்கிறார் ரவி மோகன்.