பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நடிகை த்ரிஷா பிராணிகள் மீது அதிகப் பாசம் கொண்டவர். அவர் செல்லமாக வளர்த்து வந்த 'ஸாரோ' என்ற நாய் கடந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று இறந்து போனது. அது குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டிருந்த த்ரிஷா, கொஞ்ச நாட்களுக்கு வேலைகளிலிருந்தும், சமூக வலைத்தளங்களில் இருந்தும் விலகியருக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.
அவர் நடித்த 'விடாமுயற்சி' படம் வெளிவந்த போது கூட அது குறித்து கூட ஒரே ஒரு பதிவை மட்டுமே பதிவிட்டிருந்தார். இந்நிலையில் த்ரிஷா தற்போது புதிதாக நாய்க்குட்டி ஒன்றைத் தத்தெடுத்துள்ளார். “இஸ்ஸி'யை நான் தத்தெடுத்த நாள், அவள் என்னைக் காப்பாற்றினாள். எனது வாழ்க்கையில் ஒளி தேவைப்பட்ட போது, கடவுள் என்னிடம் அனுப்பி வைத்துள்ளார். என்றென்றும் என் காதலர் இவள் தான்” என அது குறித்து நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.