இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ் சினிமாவில் புது அலையை உருவாக்க களமிறங்கி இருக்கிறார் நடிகை பாக்யஸ்ரீ. மராட்டிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், 1950 களின் தமிழ்நாட்டை பின்னணியாகக் கொண்ட 'காந்தா' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். செல்வமணி செல்வராஜ் இந்த 'காந்தா' படத்தை இயக்குகிறார்.இந்த திரைப்படத்தை நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனமும், நடிகர் துல்கர் சல்மானின் வேபேரர் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இதில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடிக்க, அவருக்கு ஜோடியாக பாக்கியஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த இவர் மராட்டிய அரச குடும்பத்தில் பிறந்தவர். நடிப்பு மீது கொண்ட ஆர்வம் காரணமாக தொலைக்காட்சி தொடர்களிலும், ஒரு மராட்டிய படத்திலும் நடித்துள்ளார்.
தமிழ் படத்தில் அறிமுகமாகும் பாக்யஸ்ரீ கூறியது, இதுபோல் ஒரு மிகச்சிறந்த அறிமுகம் தமிழில் எனக்கு கிடைத்தது பெருமையாக உள்ளது. எனக்கு தமிழ் தெரியாவிட்டாலும், அந்த மொழியைக் கற்றுக் கொள்ள மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டேன். அதனால் எனது கதாபாத்திரத்திற்கு இன்னும் ஆழமாக உயிர் கொடுக்க முடிந்தது. 'காந்தா' திரைப்படம் வெளியான பிறகு நிச்சயம் ரசிகர்கள் என்னை ஏற்றுக் இங்குள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். அதோடு நிறைய தமிழ் படங்களிலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.