போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை | இன்ஸ்டாகிராம் புரமோஷனை கூட தவிர்க்கும் இளம் நடிகை ; இயக்குனர் விரக்தி | முடக்கப்பட்ட எக்ஸ் தளத்தை மீட்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா கோஷல் | அஜித்தின் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' பட டீசர்களுக்கு இடையே இப்படி ஒரு வித்தியாசமா? |
தங்கலான் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் வீரதீரசூரன். சமீபத்தில் சித்தார்த் நடித்த சித்தா படத்தை இயக்கி வெற்றி படமாக கொடுத்த இயக்குனர் எஸ் யு அருண்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கடந்த வருடத்திலிருந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதே லைகா நிறுவனத்தின் இன்னொரு தயாரிப்பான அஜித்தின் விடாமுயற்சி படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் வீரதீரசூரன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
ஆனாலும் விடாமுயற்சி தாமதமானதால் பொங்கல் வெளியீட்டில் வேறு படங்கள் இடம் பிடித்தன. தவிர பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சியும் வெளியானது. இதைத் தொடர்ந்து மார்ச் 27ம் தேதி வீரதீரசூரன் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. இந்த நிலையில் இந்த ரிலீஸ் தேதியும் தற்போது தள்ளிப் போகலாம் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம் மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் லூசிபர் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள 'எம்புரான்' திரைப்படம் வரும் மார்ச் 27ம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கிறது.
வீரதீரசூரன் தள்ளிப்போவதற்கு காரணம், எம்புரன் படத்தை மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிலும் லைகா நிறுவனமே கவனம் செலுத்தி வருகிறது. அதனால் ஒரே தேதியில் தங்களது இரண்டு படங்கள் வெளியானால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை கணக்கில் கொண்டு தான் வீரதீரசூரன் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. அனேகமாக ஏப்ரல் மாதம் மாணவர்களின் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை துவங்கும் சமயத்தில் வீரதீரசூரன் படத்தை ரிலீஸ் செய்யவும் ஒரு திட்டம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.